செய்திகள்

ஓமியோபதி படிப்பில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Published On 2018-07-31 04:21 IST   |   Update On 2018-07-31 04:21:00 IST
இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. #Homeopathy #LokSabha
புதுடெல்லி:

இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

2 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இது தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதன் மீதான விவாதத்துக்கு மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் பதில் அளித்து பேசுகையில், “இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி தொடங்கியவர்கள், புதிய ஓமியோபதி படிப்புகளை தொடங்கியவர்கள், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியவர்கள், ஓராண்டுக்குள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால், அவர்கள் அளிக்கும் பட்டம், அங்கீகரிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தார். #Homeopathy #LokSabha #tamilnews 
Tags:    

Similar News