செய்திகள்
9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை - சூரத் நீதிமன்றத்தில் பரபரப்பு
கணவர் மீதான வன்கொடுமை வழக்கில் ஆஜராவதற்காக இன்று சூரத் நீதிமன்றத்துக்கு வந்த 27 வயது இளம்பெண் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் லிம்பயாத் காவல்நிலையத்தில் தனது கணவர் கொடுமை செய்வதாக சில்பா லால்சந்த் சிங் என்ற 27 வயது பெண் அளித்திருந்த புகார் மீது இன்று சூரத் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜராவதற்காக சில்பா லால்சந்த் சிங் நீதிமன்றம் வந்தடைந்தார்.
அப்போது, தீடீரென நீதிமன்றத்தின் 9-வது மாடியில் இருந்து சில்பா குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
குஜராத் மாநிலத்தில் லிம்பயாத் காவல்நிலையத்தில் தனது கணவர் கொடுமை செய்வதாக சில்பா லால்சந்த் சிங் என்ற 27 வயது பெண் அளித்திருந்த புகார் மீது இன்று சூரத் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜராவதற்காக சில்பா லால்சந்த் சிங் நீதிமன்றம் வந்தடைந்தார்.
அப்போது, தீடீரென நீதிமன்றத்தின் 9-வது மாடியில் இருந்து சில்பா குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat