செய்திகள்
தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி அவரது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #MannKiBatt #RahulGandhi
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த மாதம் விவசாயிகளுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், தனது விவசாய வருமானம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என கூறும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஆனால், அது அவரது மனதின் குரலாக மட்டுமே இருக்க வேண்டும் என விரும்புவது போல் தெரிகிறது. அவர் கூறியது போல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. இது சத்தீஸ்கர் பெண்மணி விவகாரத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மேலும், சத்தீஸ்கர் பெண் கூறியதாக வெளியான வீடியோவையும் தனது பதிவில் இணைத்துள்ளார். #PMModi #MannKiBatt #RahulGandhi