செய்திகள்

பிரேயரில் ‘கொட்டாவி’ விட்டதற்காக மாணவரை அடித்த தலைமை ஆசிரியை

Published On 2018-06-26 09:04 GMT   |   Update On 2018-06-26 09:04 GMT
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிரேயரில் ‘கொட்டாவி’ விட்டதற்காக மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை:

குழந்தைகள் தங்களது பெற்றோர்களையும் தாண்டி அதிக நேரம் பள்ளி ஆசிரியர்களுடனே இருக்கிறார்கள். குழந்தைகள் அவர்களது குழந்தை தன்மையை இழந்தால் மட்டுமே பள்ளிகளில் படிக்க முடியும் என்கிற சூழ்நிலையை தற்போதைய தனியார் பள்ளிகள் உருவாக்கி விட்டன.

அந்த நிலை தான் சரியானது எனும் மாய பிம்பைத்தை பெற்றோர்களிடமும் ஏற்படுத்திவிட்டன. குழந்தைகளை அவர்களின் இயல்பான குணங்களை விடுத்து, புத்தகம் கற்கும் கணினிகளாக பள்ளிகள் வளர்க்கின்றன. அதனை மீறும் குழந்தைகள் கடுமையாக தாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.

அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் காலை பிரேயரின் போது 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கொட்டாவி விட்டதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவரை அடித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, ஆசிரியர்களை மதிக்காமல் செயல்பட்டால் தண்டனை அளிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை, நயாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த தலைமை ஆசிரியை மாணவர்களை மிரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தனது புகார் மனுவில் சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News