செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது கையெறி குண்டு வீச்சு - 4 வீரர்கள் காயம்

Published On 2018-06-01 11:12 GMT   |   Update On 2018-06-01 11:12 GMT
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனங்களின் மீது பயங்ரவாதிகள் இன்று பிற்பகல் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட கானாபால் பகுதியில் இன்று பிற்பகல் பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கம்போல் வாகனங்களின் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வாகனங்களின் மீது பயங்ரவாதிகள் இன்று பிற்பகல் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். #Kashmirmilitants #grenadeattack
Tags:    

Similar News