செய்திகள்

உ.பி.யில் தொடரும் கொடூரம் - நாய் கடித்து குதறியதில் மேலும் ஒரு சிறுமி பலி

Published On 2018-05-29 05:23 GMT   |   Update On 2018-05-29 05:23 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய் கடித்து குதறியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #straydogs
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். மோராபாத் பகுதியில் கடந்த 5 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தெரு நாயால் தாக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.


இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோதிநகரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் நேற்று சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். #straydogs
Tags:    

Similar News