செய்திகள்

திருப்பதியில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்

Published On 2018-05-15 04:03 GMT   |   Update On 2018-05-15 04:03 GMT
திருப்பதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். #edappadipalaniswami #tirupati
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் சேலத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் வழியாக கார்மூலம் திருமலைக்கு வந்தார்.

திருப்பதிக்கு வந்த அவரை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு திருப்பதி ஆர்.டி.ஓ. கனக நரசாரெட்டி, துணை செயல் அலுவலர் பாலாஜி, ஏ.எஸ்.பி. முரளி கிருஷ்ணா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர், ஆந்திர மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இரவில் வராக சுவாமி ஹயக்ரிவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார். இன்று அதிகாலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் சென்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தார்.

ரங்கநாயகர் மண்டபத்தில் வைத்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் மற்றும் சாமி படங்களை வழங்கினர். #edappadipalaniswami #tirupati
Tags:    

Similar News