இந்தியா

துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் குடிபோதையில் ரகளை- 2 பயணிகள் கைது

Published On 2023-03-23 10:03 GMT   |   Update On 2023-03-23 10:03 GMT
  • சொந்த ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் 2 பேரும் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தனர்.
  • அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் 2 பேரையும் கண்டித்தனர்.

மும்பை:

மராட்டிய மாநிலம் நலசோப்ரா பகுதியை சேர்ந்த 2 பேர் வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர். ஒரு ஆண்டுக்கு பிறகு அவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

சொந்த ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் 2 பேரும் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தனர். இதனால் அவர்களுக்கு போதை தலைக்கேறியது. அதில் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நடந்துகொண்டே மது குடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் 2 பேரையும் கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சக பயணிகளை ஆபாசமாக திட்டினார்கள். இதை தட்டிக்கேட்ட விமான பணியாளர்களை யும் 2 பேரும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர். உடனே விமான பணியா ளர்கள் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை கைப்பற்றினார்கள்.

அந்த விமானம் மும்பையில் தரை இறங்கியதும் போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News