இந்தியா
null

குஜராத்தில் சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் கைது

Published On 2026-01-11 14:06 IST   |   Update On 2026-01-11 14:07:00 IST
  • அங்கு காரில் வந்த மேலும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
  • சிறுமி அடையாளம் காட்டிய மூன்று நண்பர்களை முதலில் பிடித்த போலீசார், அவர்கள் மூலம், தலைமறைவாக இருந்த மற்ற ஐந்து பேரையும் கைது செய்தனர்.

குஜராத் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் வன்ஸ்தா நகரில் கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில், அந்தச் சிறுமி தனது வீட்டின் வெளியே வந்தபோது, மூன்று இளைஞர்கள் அவரை இரு சக்கர ஏற்றி கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்ட சிறுமியை அருகில் உள்ள ஒரு தடுப்பணைக்கு கொண்டு சென்ற அவர்கள், அங்கு காரில் வந்த மேலும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பி தனது தாயிடம் நடந்ததைக் கூறியுள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வன்ஸ்தா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினரின் விசாரணையில், சிறுமியை முதலில் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற மூன்று பேரும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

சிறுமி அடையாளம் காட்டிய மூன்று நண்பர்களை முதலில் பிடித்த போலீசார், அவர்கள் மூலம், தலைமறைவாக இருந்த மற்ற ஐந்து பேரையும் கைது செய்தனர். தற்போது 8 பேரும் போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

Tags:    

Similar News