இந்தியா

11 உயிரிழப்பு: கர்நாடக நீதிமன்றம் சரமாரி கேள்வி- மாநில அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

Published On 2025-06-05 15:59 IST   |   Update On 2025-06-05 15:59:00 IST
  • சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
  • விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம்.

ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக ஆர்சிபி அணி வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில்,பெங்களூரு ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அப்போது, விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?" ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News