செய்திகள்
தூத்துக்குடியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி:
பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.
இதில், கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்றார். தமிழிசையைவிட கனிமொழி 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 49,222 வாக்குகள் பெற்றார்.