செய்திகள்
ப.சிதம்பரம் வாக்களித்து விட்டு விரலை காட்டினார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லும்- வாக்களித்த பின் ப.சிதம்பரம் பேட்டி

Published On 2019-04-18 04:21 GMT   |   Update On 2019-04-18 04:21 GMT
7-வது முறையாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார். #Loksabhaelections2019 #PChidambaram
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று காலை வாக்களித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் இந்தியாவில் நாம் விரும்புகின்ற மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்காக வாக்களித்துள்ளேன். இதேபோல் தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

சுயமரியாதை, பகுத்தறிவு, ஜனநாயகம்,சாதி, மத வேறுபாடு இல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம், தமிழின மாண்பு போன்றவற்றை காப்பாற்றுவதற்காக தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி, தாயார் நளினி ஆகியோருடன் வாக்களித்தார்.

மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் வெல்லும். கடந்த 1971, 80, 96, 98, 2004, 2009 ஆகிய 6 முறை இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது 7-வது முறையாக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது மனைவி ஸ்ரீநிதி, தாயார் நளினி ஆகியோருடன் வந்து வாக்கு செலுத்தினார். #Loksabhaelections2019 #PChidambaram
Tags:    

Similar News