செய்திகள்

சங்கராபுரத்தில் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

Published On 2019-04-15 06:47 GMT   |   Update On 2019-04-15 06:47 GMT
சங்கராபுரத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரிஷிவந்தியம்:

தேர்தல் நிலையகண் காணிப்பு குழு அலுவலர் தனபால் தலைமையிலான குழுவினர், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே புதுபேட்டை கிராமத்தில் வாகன சோதனை மேற் கொண்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த புதுபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன், என்பவர் உரிய ஆவணமில்லாமல் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் ரிஷிவந்தியம் பறக்கும்படை அலுவலர் சாமிதுரை தலைமையில் மணலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் அதிரடிபடையினர் வாகன சோதனை நடத்தினர்.

மோட்டார் சைக்கிளில் வந்த பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மாணிக்கம், வெங்கடேசன் ஆகியோரிடம் சோதனை செய்தனர். அவர்கள் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தார் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.

பண்ருட்டி தொகுதி பறக்கும் படை தேர்தல் அலுவலர் கல்யாணசுந்தரம் தலைமையில் பறக்கும் படை போலீசார் ஜெயக்குமார், வெங்கடேசன் ஆகியோர் வானமாதேவி அணைக்கட்டு பகுதியில் தீவிர வாகன சோதனை செய்தனர்.

அப்போது அவ்வழியே வந்த குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் மோட்டார் சைக்கிளில் எந்தவித ஆவணமின்றி 1 லட்சத்து 19 ஆயிரம் 980 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை பறக்கும்படையினர் பண்ருட்டி தாசில்தார் கீதாவிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News