செய்திகள்

விக்கிரவாண்டி அருகே வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் பறிமுதல்

Published On 2019-04-09 05:06 GMT   |   Update On 2019-04-09 05:06 GMT
விக்கிரவாண்டி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்க வரிமையம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் நாராயணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் இருந்தவரிடம் விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த முட்டை வியாபாரி முருகேசன் (41) என்பது தெரியவந்தது. அவரிடம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் இருந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் ஏட்டுகள் பிரபாகரன், சசிகுமார், முருகானந்தம் ஆகியோர் மதுரபாக்கம் அடுத்த எம். குச்சிபாளையம் பகுதியில் விழுப்புரம் திருக்கனூர் சாலையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருக்கனூர் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. விசாரணையில் அவர் திருக்கனூர், பிடாரி பட்டை சேர்ந்த முறுக்கு வியாபாரி மலைசாமி (39) என்பது தெரிந்தது.

அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாராயணன், மோகன் ஆகியோர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர் ராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.#LokSabhaElections2019

Tags:    

Similar News