செய்திகள்

தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் 10-ந்தேதி திருச்சி வருகை

Published On 2019-03-29 05:16 GMT   |   Update On 2019-03-29 05:16 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக ஏப்ரல் 10-ந்தேதி திருச்சி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
சென்னை:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் மீண்டும் ராகுல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வர இருக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் புதுவை உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே புதுவை மற்றும் தமிழகத்துக்கு வசதியாக ஏதாவது ஒரு நகரத்தில் ராகுல் பிரசாரத்துக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அதன்படி திருச்சியை தேர்வு செய்துள்ளனர். விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய தொகுதிகளும் அருகில் இருப்பதால் திருச்சியில் ராகுல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி ராகுல் பிரசாரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளையும் பரிசீலித்து வருவதாகவும் ராகுலின் மற்ற மாநில சுற்றுப்பயணத்தின் அடிப்படையில் இரண்டில் ஒரு தேதி முடிவாகும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ராகுல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi

Tags:    

Similar News