செய்திகள்

திருப்பூர் தொகுதியில் பிரேமலதா 27-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்

Published On 2019-03-23 07:02 GMT   |   Update On 2019-03-23 07:02 GMT
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27-ந்தேதி திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப். 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. அப்போது உடல் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது.


இதனால் அவரது மனைவி பிரேமலதா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க., பா.ம.க. , பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அவர் வருகிற 27-ந்தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெறவுள்ள 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க. தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27.03.2019 (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #PremalathaVijayakanth #LSPolls
Tags:    

Similar News