செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்- தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

Published On 2019-03-15 07:38 GMT   |   Update On 2019-03-15 07:38 GMT
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. #NaamThamizharKatchi #KarumpuVivasayi
சென்னை:

நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட சீமான் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கிடைத்தது பற்றி கூறும்போது, மக்களுக்கு ஒளிதரும் மெழுகு வர்த்தியாக இருப்போம் என்று தெரிவித்தார்.

இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் தங்களது கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை அச்சிட்டு வந்தனர். பாராளுமன்ற தேர்தலிலும் இந்த சின்னத்தையே ஒதுக்குமாறு கூறி இருந்தனர்.



இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். #NaamThamizharKatchi #KarumpuVivasayi
Tags:    

Similar News