உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.

தாண்டிக்குடியில் வாலிபர் தற்கொலை

Published On 2023-07-10 11:49 IST   |   Update On 2023-07-10 11:49:00 IST
  • விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரியூர், நடுப்பட்டி, மன்றக்கால்வாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுதாகர் (வயது26). கூலித்தொழிலாளி.

இவர் நேற்று இரவு விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News