உள்ளூர் செய்திகள்

மானூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2023-08-26 14:25 IST   |   Update On 2023-08-26 14:25:00 IST
  • முத்துகிருஷ்ணன் சம்பவத்தன்று எட்டாங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
  • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் முத்துகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள ரஸ்தா நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 28). இவர் முன்னாள் மானூர் ஒன்றிய பா.ஜனதா செயலாளர் ஆவார். சம்பவத்தன்று அவர் எட்டாங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News