உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வேன்.


கயத்தாறு அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

Published On 2022-07-01 08:51 GMT   |   Update On 2022-07-01 08:51 GMT
  • சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து ,கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் ராஜாவை கைது செய்தனர்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலிப் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வேனை சோதனையிட்டதில் அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தனர்.

வேனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜா ( வயது 25) என்பதும் இவர் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ரைஸ் மில் மற்றும் கோழி பண்ணைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து , கடத்தப்பட்ட ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் வேனை ஓட்டிவந்த ராஜாவை கைது செய்தனர்.

பின்னர் அவரை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News