உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
- கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவில் சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது .
இதையடுத்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, சிறிய அளவிலான கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு மகன் பார்த்திபன்(வயது28) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.