உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

Published On 2023-03-08 15:37 IST   |   Update On 2023-03-08 15:37:00 IST
  • கோவிந்தன் என்பவரின் குடும்பத்திற்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
  • மாற்றுதிறனாளி தங்கையை கோவிந்தனின் மகன் செல்வமணி (24) தகாத வார்த்தையால் திட்டி அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள செம்மண் கூடல் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (வயது 44). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் குடும்பத்திற்கும் நிலபிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சின்னபொண்ணுவின் மாற்றுதிறனாளி தங்கையை கோவிந்தனின் மகன் செல்வமணி (24) தகாத வார்த்தையால் திட்டி அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது.

இதுபற்றி செல்வமணி மீது சின்னபொண்ணு தாரமங்கலம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனர்.

Tags:    

Similar News