உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை
- நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோமளா குளியல் அறைக்கு சென்றார்.
- கோமளா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மேல் தெரு பி.வி.களத்தூரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் கோமளா என்ற அஸ்வினி (வயது22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது அங்கு அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.