உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2023-05-03 09:10 GMT   |   Update On 2023-05-03 09:10 GMT
  • இசக்கிமுத்து சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
  • மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது.

களக்காடு:

திசையன்விளையை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 40). இவர் பரப்பாடி அருகே உள்ள இலங்குளத்தில் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளியான இவர் நேற்று விநாயகர்புரம் காலனியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பலகையை அறுக்கும் மிஷினில் பழுது ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News