உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட நரசிங்க மூர்த்தி.

தொழிலாளி வெட்டிக்கொலை

Published On 2022-08-09 09:05 GMT   |   Update On 2022-08-09 09:05 GMT
  • தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி, மகன்களுடன் தகராறு செய்துள்ளார்.
  • ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்த முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கமூர்த்தி. கட்டிடத் தொழிலாளியான இவர் குடித்துவிட்டு மனைவி- மகன்களுடன் தகராறு செய்துள்ளார். இதனால் அருகில் உள்ள உறவினர் பரமசிவம் வீட்டில் சென்று அவரது மனைவி தனது மகன்களுடன் தங்கியிருந்தார்.

அப்போது அங்கு வந்த நரசிம்மமூர்த்திக்கும், பரமசிவத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் மற்றும் மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் நரசிம்மமூர்த்தியை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே நரசிம்மமூர்த்தி உயிரிழ ந்தார்.இது குறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News