உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் விஷம் குடித்து பெண் சாவு

Published On 2023-08-30 09:06 GMT   |   Update On 2023-08-30 09:06 GMT
  • பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுதா (வயது34) இவர் நேற்று அதிகாலை விஷம் குடித்தார். இதனையடுத்து அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News