உள்ளூர் செய்திகள்

அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம்: குமரி எம்பி விஜய்வசந்த் அடிக்கல் நாட்டினார்

Published On 2026-03-02 16:07 IST   |   Update On 2026-03-02 16:07:00 IST
  • மக்களின் கோரிக்கையை ஏற்று உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.
  • இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொகுதியில் மக்களுக்கு தனது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் மக்களின் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள், அங்கன்வாடி, நியாயவிலைக் கடை, பள்ளி வகுப்பறைகள், உயர் கோபுர சோலார் மின்விளக்கு போன்ற முக்கிய பணிகள் செய்து வருகிறார், அந்த வகையில் அன்னைநகர் மக்களின் கோரிக்கையை ஏற்று உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம். பள்ளம் துறை ஊராட்சி, அன்னை நகரில் பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி (2025-2026) மேம்பாடு நிதியிலிருந்து ரூ. 25,00,000 இலட்சம் செலவில் உள் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு நிதி ஓதுக்கீடு செய்து இன்று அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னைநகர் பங்குதந்தை ரெமண்ட் அர்ச்சிப்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் வட்டார தலைவர் அசோக்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் மணக்குடி லாரன்ஸ், நாகர்கோவில் மாநகர பொதுச்செயலாளர் கலையரசு, அன்னை நகர் ஊர் தலைவர் கென்னடி, அன்னை நகர் முன்னாள் ஊர் தலைவர் ஆன்சல், அன்னை நகர் காங்கிரஸ் தலைவர் லூயிஸ், பள்ளம் பஞ்சாயத்து கமிட்டி காங்கிரஸ் தலைவர் கெவின், புத்தளம் பேரூராட்சி தலைவர் ரங்கன், தர்மபுரம் பஞ்சாயத்து பொருளாளர் ரவிசந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வி, சார்லஸ் செல்லையா, ஒப்பந்தக்காரர் முருகன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News