உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2023-06-07 14:25 IST   |   Update On 2023-06-07 14:25:00 IST
  • ராஜாக்கனி கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
  • அக்கம்பக்கத்தினர் ராஜாக்கனியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

நெல்லை:

பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜக்கனி (வயது36). இவரது கணவர் டானி ரூபன் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த ராஜாக்கனி கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News