உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மேளதாளங்கள் முழங்க மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

Published On 2023-06-12 09:54 GMT   |   Update On 2023-06-12 09:54 GMT
  • நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
  • பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.

இன்று 6 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன.

நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த வாரம் அந்தந்த பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்கப்பட்டனர்.

தஞ்சை கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் நாதஸ்வரம் ,தவில் உள்ளிட்ட இன்னிசை மேளங்கள் முழங்க பேரணியாக அழைத்து வரப்பட்டு, உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

Tags:    

Similar News