உள்ளூர் செய்திகள்

பெண் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-06-22 10:51 GMT   |   Update On 2022-06-22 10:51 GMT
  • விருதுநகர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சிவரக்கோட்டையை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது 48). இவரது மனைவி புஷ்பராணி (45). இவர்களது மகன் ருஜித்குமார் சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் தனது தாயாரிடம் ருஜித்குமார் பேசுவதை தவிர்த்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த புஷ்பராணி அவரது தாயார் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.

ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பராணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் கிழக்கு பாண்டியன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (27). இவரது மனைவி சக்திபிரியா.

கடந்த சில மாதங்களாக அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக சக்தி பிரியா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மனைவியிடம் சமரசம் பேசி பலனில்லை. இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News