உள்ளூர் செய்திகள்

செல்போன் டவரில் காப்பர் கம்பி திருடிய வாலிபர்

Published On 2022-09-02 15:12 IST   |   Update On 2022-09-02 15:12:00 IST
  • செல்போன் டவரில் காப்பர் கம்பி திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்.
  • திருட்டு சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர நாச்சியார்புரத்தில் தனி யார் செல்போன் நிறு வனத்தின் டவர் உள்ளது. அதனை பராமரித்து வந்த வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள் நேற்று பார்க்க சென்றனர்.

அப்போது செல்போன் டவரில் இருந்த காப்பர் கம்பிகளை வாலிபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். ஈஸ்வரனை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டி சென்று பிடித்து சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டவர் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேஷ்ராம் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News