உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-10 09:28 GMT   |   Update On 2022-06-10 09:28 GMT
  • ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ராஜபாளையம்

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவைகளை வழங்க கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அறிவிக்க கோரியும் உள்பட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் முத்து வெள்ளையப்பன் தலைமை தாங்கினார். தமிழ்செல்வி வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்க துணைத் தலைவர் கணேசன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராஜ்குமார், சாலை பணியாளர் சங்கம் சார்பில் கருமலை, நூலகத் துறை சார்பில் ராஜகுரு உள்பட பலர் பேசினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் நிறைவு உரையாற்றினார். பேரூராட்சிகள் துறை சார்பில் மணிகண்டபிரபு நன்றி கூறினார். ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News