உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி விபத்து

வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2022-06-12 09:33 GMT   |   Update On 2022-06-12 09:33 GMT
  • அடையாளம் தெரியாத வாகனம் வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
  • அப்பநாயக்கன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

சாத்தூர் அருகே உள்ள சிறுகுளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி மீனாட்சி (65). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீனாட்சி மீது மோதி விட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News