உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி

Published On 2022-09-02 15:14 IST   |   Update On 2022-09-02 15:14:00 IST
  • சிவகாசியில் பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
  • கணவர் மகேஸ்வரனின் பெயரில் உள்ள காசோலையை கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டிைய சேர்ந்தவர் கோமதி (வயது 30). இவரிடம் சிவகாசி ரிசர்வ் லைனை சேர்ந்த சங்கரேஸ்வரி என்பவர் கடந்த 9-9-2021 அன்று ரூ.3 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். அதற்கு தனது கணவர் மகேஸ்வரனின் பெயரில் உள்ள காசோலையை கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அதுபற்றி அறிந்த கோமதி அவரிடம் ேகட்டதற்கு சங்கரேஸ்வரி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கோமதி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார், சங்கரேஸ்வரி மீது மோசடி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News