உள்ளூர் செய்திகள்

தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை

Published On 2023-09-09 14:00 IST   |   Update On 2023-09-09 14:00:00 IST
  • தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜூலி என்ற மரியசாமி(வயது45). இவர் தனது 17 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். இதன் காரணமாக விரக்தியடைந்த மரியசாமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கே.தொட்டிய பட்டியை சேர்ந்தவர் முருகன்,சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கு நோய் பாதிப்பு இருந்ததால் வேலைக்கு செல்ல இயல வில்லை. இதில் விரக்திய டைந்த முருகன் தூக்குபே் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.

தாயில்பட்டியை சேர்ந்தவர் சங்கேர சுவரன்(35). இவருக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதில் விரக்தி யடைந்த சங்கரேசுவரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி கற்பகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News