உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மர்ம சாவு

Published On 2023-09-21 10:03 GMT   |   Update On 2023-09-21 10:03 GMT
  • தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் முத்துராம லிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வபோதகர் (வயது32). வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி ஜெனிட்டா (23). இவர்க ளுக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளார். செல்வபோதகர் தனது தாய்-தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் செல்வபோதகர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மனைவி செல்போனில் அழைத்த போது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

பின்னர் கணவரின் தம்பியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் விசாரித்த போது விருதுநகர்-சாத்தூர் நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் ரெயில்வே பாலம் அருகே செல்வபோதகர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசில் ஜெனிட்டா புகார் கொடுத்தார்.

அதில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் மனஉளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News