உள்ளூர் செய்திகள்

கண்தான விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-04 08:36 GMT   |   Update On 2022-09-04 08:36 GMT
  • கண்தான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

ராஜபாளையம்

தேசிய கண் தானஇரு வார விழாவை முன்னிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் காந்தி சிலை அருகில் விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வழியாக அரசு மகப்பேறு மருத்துவமனை கூட்ட அரங்கிற்கு வந்தது. பேரணியை இணை இயக்குநர் முருகவேல் தொடங்கி வைத்தார். மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சுரன் நர்சிங் காலேஜ் மாணவிகளின் கண்தான விழிப்புணர்வு பற்றிய போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கண் தானம் செய்த குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை அன்னை சந்தியா கண்தான கழக நிறுவனர் நாகலட்சுமி வழங்கினார்.

இதில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜெயபாஸ்கர், நூர்தீன், நதியா உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News