உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம்

Published On 2022-06-20 08:41 GMT   |   Update On 2022-06-20 08:41 GMT
  • பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம் பிடித்தது.
  • விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர்.

விருதுநகர்

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 21 ஆயிரத்து 602 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.25 சதவீதம் தேர்ச்சி ஆகும். விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Tags:    

Similar News