உள்ளூர் செய்திகள்

தொழிற்சங்கங்கத்தினர் மறியல்

Published On 2023-01-26 08:03 GMT   |   Update On 2023-01-26 08:03 GMT
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
  • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News