உள்ளூர் செய்திகள்

தீயில் கருகி முதியவர் சாவு

Published On 2022-09-04 08:40 GMT   |   Update On 2022-09-04 08:40 GMT
  • தீயில் கருகி முதியவர் பலியானார்.
  • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் அருகே உள்ள பெரிய தாதம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 62). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் வசிக்கும் தனது சகோதரி சரஸ்வதி வீட்டிற்கு ராமராஜ் வந்துள்ளார்.

அன்றிரவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற ராமராஜ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர் தாதம்பட்டிக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினரும் கருதி விட்டனர்.இதற்கிடையில் சரஸ்வதி வீட்டில் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மண்டபத்தில் உடல் கருகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் ராமராஜ் என தெரியவந்தது.

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News