உள்ளூர் செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-03 08:22 GMT   |   Update On 2022-09-03 08:22 GMT
  • விருதுநகர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பொன் இருளப்ப சுவாமி கோவில் வளாகத்தில், புதிதாக பொன் விநாயகர் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நூர்சாகிபுரத்தில் பொன் இருளப்ப சுவாமி சாமியாடி அழைப்பு, வைத்தியலிங்காபுரம் கோவில் வீட்டில் இருந்து பொங்கல்பானை அழைத்தல், இரவு சாமி அலங்காரம், அன்னதானம் நடந்தது. கோவில்பட்டி பாலகணேஷ் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடந்தது. 'பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களுக்கு உச்சிகால பூஜைகள் நடந்தன. இன்று (3-ந் தேதி) அதிகாலை பொங்கல் வைத்தல், அன்னதானம், கிடா வெட்டு நிகழ்வோடு ஆவணித்திருவிழா நிறைவடைந்தது.

Tags:    

Similar News