தேசிய அளவில் தொழில் அமைச்சக விருது
- விருதுநகர் மாவட்டத்திற்கு தேசிய அளவில் தொழில் அமைச்சக விருதை 30-ந் தேதி கலெக்டர் பெற்றுக்கொள்கிறார்.
- விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மற்றும் முன்னேற விளையும் மாவட்டமாக தொடர்ந்து நீட்டிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதில் இருந்து 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த மாவட்டங்களை முன்னேற்றும் வகையில் பாரத பிரதமரால் ஜனவரி-2018-ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேற்படி 112, மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
இதற்கென, சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த காரணிகள் அடிப்படையாக உள்ளன.
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய விருதுகள்-2022க்கான விருதுகள் பிரிவில் முதல் பரிசிற்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முன்னேற விளை யும் மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப் பட்டு, டெல்லியில் வருகிற 30-ந் தேதி விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இந்திய அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவ னங்களின் முதல் விருது வழங்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனை வோர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மாவட்ட தொழில் மையம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி மையம் மூலம் செயல்படுத்த படும் திட்டங்களை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சி அடைந்த மற்றும் முன்னேற விளையும் மாவட்டமாக தொடர்ந்து நீட்டிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.