உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-22 10:29 GMT   |   Update On 2022-06-22 10:29 GMT
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள், லேப் டெக்னீசியன் நியமிக்க வேண்டும். புதிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். நகர் குழு உறுப்பினர்கள் மேரி, முருகானந்தம், செல்வராஜ், மாதர் சங்க நகரத் தலைவர் மைதிலி, மாணவர் சங்க தாலுகா செயலாளர் ஹரிராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சரவணன், செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News