உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் நகை மோசடி

Published On 2022-06-19 13:45 IST   |   Update On 2022-06-19 13:45:00 IST
  • பெண்ணிடம் நகை மோசடி செய்யப்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் அமுதாபுஷ்பம் (வயது 46). இவர் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இேத தீப்பெட்டி ஆலையில் மானேஜராக வேலை பார்க்கும் முத்துகுமார் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை தொடர்ந்து அமுதாபுஷ்பம் தனது 17 பவுன் நகையை கொடுத்துள்ளார். அதனை முத்துகுமார் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி அமுதாபுஷ்பம் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News