- அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்துள்ளார்.
- வணிக வரித்துறை பெண் அலுவலரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டிதேவி (வயது36). இவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி வணிக வரித்துறையில் பணியாற்றும் குருராஜ் என்பவரின் மனைவி சித்ராதேவி அறிமுக மானார். அப்போது எங்கள் அலுவலகத்தில் காலிபணியிடம் இருப்பதாகவும், அதில் சேர நேர்முக கடிதம் அனுப்புவதாகவும் கூறினார்.
இதற்கு செலவாகும் என தெரிவித்ததால் நான் பல்வேறு தவணைகளில் சித்ராதேவியிடம் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கொடுத்தேன். அதன்பின் அவர் அரசு வேலைக்கான ஆணையை கொடுத்தார். அதை சம்பந்தப்பட் அலுவலகத்தில் காண்பித்தபோது போலி யானது என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தை தராமல் இழுத்தடித்தார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி புகார் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை பெண் அலுவலர் சித்ராதேவியை தேடி வருகின்றனர். அரசு அலுவலர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.