உள்ளூர் செய்திகள்
- மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.
- விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், நகர் காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜலிங்கராஜா, பொன். சக்தி மோகன், முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், கணேசன், பேரூராட்சி தலைவர்கள் நச்சாடலிங்கம், கர்ணன், தேவதானம் பச்சையாத்தான், சிறுபான்மை பிரிவு செய்யது இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.