- காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 75 பேரை நகர இன்ஸ்பெக்டர் கீதா கைது செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் அமலாக்க துறையை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
நகரத் தலைவர் பட்சிராஜா வன்னியராஜ், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி மெடிக்கல் பெரியசாமி, தெற்கு வட்டாரத் தலைவர் பாலகுருநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநி பொதுக்குழு உறுப்பினர் சக்திமோகன் கலந்துகொண்டார். இதில் வடக்கு வட்டார தலைவர் முருகராஜ், ராஜபாளையம் வட்டார தலைவர் கணேசன், வத்திராயிருப்பு மேற்கு வட்டார தலைவர் லட்சுமணன், கிழக்கு வட்டார தலைவர் சுப்பிரமணியன், மம்சாபுரம் நகர தலைவர் ஜெயக்குமார், மாவட்ட வர்த்தக பிரிவு ஆறுமுகம், நகர் பொதுச் செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் முருகேசன், பூங்கனி வட்டார செயலாளர் இம்மானுவேல், மாவட்ட செயற்குழு காசிமாயன், மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன், ராஜபாளையம் நகர தலைவர் சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் 75 பேரை நகர இன்ஸ்பெக்டர் கீதா கைது செய்தார்.