உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருணாச லேசுவரர்-உண்ணாமலை அம்மன்.

அருணாச்சலேசுவரர் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2022-09-07 08:13 GMT   |   Update On 2022-09-07 08:13 GMT
  • ராஜபாளையம் அருணாச்சலேசுவரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
  • விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழையபாளையம், புதுப்பாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் அருள்பாலிக்கும் அருணாச லேசுவரர்-உண்ணாமலை அம்மன், ஸ்ரீலஸ்ரீ சாது அருணாச்சல சுவாமிகளுக்கு ஆவணி மூலத் திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் கும்ப பூஜை, அபிஷேக பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு 16 வகை அபிஷேம் அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் அருணாச்சலேசுவரர்- உண்ணாமலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. கார்த்திக்பட்டர் தலைமையில் குழுவினர் திருக்கல்யாண வழிபாடுகள் நடந்தது.

விழாவில் பழைய பாளையம், புதுப்பாளையம் சமூக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை தலைவர் காளிமுத்து, செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ், துணை தலைவர் பாலமுருகன், துணைச் செயலாளர் ராஜா, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சரவணன், கண்ணன், நாகரத்தினவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News