உள்ளூர் செய்திகள்

ஆசிரியை உள்பட 4 பெண்கள் மாயம்

Published On 2022-06-30 08:49 GMT   |   Update On 2022-06-30 08:49 GMT
  • ஆசிரியை உள்பட 4 பெண்கள் மாயமானார்கள்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் பானுமதி.இவரது மகள் வெண்ணிலா. இவர் சூலக்கரையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற வெண்ணிலா வீடு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலைைய சேர்ந்த 15 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று மாயமானார். அதே பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றதாக அவரது தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருமலைபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரியாபட்டி அருகே உள்ள சத்திரம் புளியங்குளத்தை சேர்ந்தவர் திரிசங்கு. இவரது மகள் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் மாயமானார். காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News