மனைவி-குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான 2 வாலிபர்கள்
- ராஜபாளையம் அருகே மனைவி-குழந்தைகளை தவிக்க விட்டு 2 வாலிபர்கள் மாயமாகினர்.
- இதையடுத்து சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் திவான் மைதீன் (வயது32). பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரசிதா யாகீம் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். திவான் மைதீன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு எதிரில் ஜவுளிக்கடை திவான் மைதீனின் பெற்றோரும் இதனை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் திவான் மைதீனை காணவில்லை.
விசாரித்ததில் அந்த ஜவுளிக்கடை பெண்ணும் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ரசிதாயாகீம் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் சேத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், கட்டிட தொழிலாளி. இவருக்கு சித்திரை செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு அவசர வேலையாக வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சித்திரை செல்வி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.=